This Article is From Jul 25, 2020

இந்தியாவில் ஒரே நாளில் 48,000 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 13.36 லட்சமாக உயர்வு!

இதேபோல், நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிப்பால் 757 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 48,000 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 13.36 லட்சமாக உயர்வு!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் ஒரே நாளில் 48,000 பேருக்கு கொரோனா தொற்று
  • மொத்த பாதிப்பு எண்ணிக்கையாது 13,36,861 ஆக உயர்வு
  • நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிப்பால் 757 பேர் உயிரிழப்பு
New Delhi:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 48,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையாது 13,36,861 ஆக உயர்ந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இதேபோல், நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிப்பால் 757 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

மொத்தமாக 31,258 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், உலகளவில் உயிரிழப்பு அதிகமுள்ள நாடிகளின் வரிசையில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. குணமடைபவர்களின் விகிதமானது 63.53 சதவீதமாக உள்ளது. நேற்றைய தினம் மட்டும் அதிகபட்சமாக 4,20,898 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 3வது நாளாக 45,000க்கும் மேலான பாதிப்புகள் பதிவாகி வருகிறது. 

இதனால், இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கையானது 13 லட்சத்தை கடந்துள்ளது. இன்று ஒரேநாளில் 49,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் 177 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு 13 லட்சத்தை கடந்துள்ளது. ஜூலை 2ம் தேதி கொரோனா பாதிப்பு 6 லட்சமாக இருந்த நிலையில், 3 வாரங்களில் பாதிப்பு அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 

நாட்டில் அதிகம் பாதித்த மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 9,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் மும்பையில் மட்டும் 1,057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,57,117 ஆக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையானது 13,132 ஆக உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

டெல்லியில் 1,025 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1.28 லட்சத்தை தாண்டியுள்ளது. ஜூலை 11 முதல் 19வரை மட்டும் அங்கு பாதிப்பு எண்ணிக்கையானது 1,000 முதல் 2,000 வரை பதிவாகி வந்தது. ஜூலை 19க்கு பின்னர் 1,200க்கு கீழ் குறைந்தே உள்ளது. இதுவரை டெல்லியில் 3,777 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 

எனினும், டெல்லியில் குணமடைபவர்களின் எண்ணிக்கையானது, 86 சதவீதமாக உயர்ந்துள்ளது. 13,681 பேர் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 7 வாரங்களில் மிக குறைந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கையானது 284,196ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையாது 9,753 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஒரே நாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புக்கு பின்னர் ஏற்பட்டுள்ளது. 

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால், 633,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், 15.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

.