This Article is From Apr 06, 2020

''மற்ற நாடுகளின் நலன் கருதி கொரோனா விஷயத்தில் நடந்த உண்மைகளை சீனா சொல்ல வேண்டும்!''

இந்தியாவை பொறுத்தளவில் தற்போதுவரை 4,067 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 292 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 109 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

''மற்ற நாடுகளின் நலன் கருதி கொரோனா விஷயத்தில் நடந்த உண்மைகளை சீனா சொல்ல வேண்டும்!''

கொரோனா வைரஸ் பரவலின் மையப்புள்ளியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மாறியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • முதன் முதலாக சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் பாதிப்பு ஏற்பட்டது
  • கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரத்தை சீனா இன்னும் வெளியிடவில்லை
  • சீனா உண்மையை சொன்னால் மட்டுமே கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்கலாம்
Washington:

கொரோனா வைரஸ் விவகாரத்தில் நடந்த உண்மைகளை சீனா அப்படியே தெரிவிக்க வேண்டும் என்றும், அதனால் மட்டுமே மற்ற உலக நாடுகள் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று பிரபல அமெரிக்க வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான தடுப்பு மற்றும் குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கொரோனா எப்படி உருவானது, அதை எப்படி கட்டுப்படுத்தினோம் என்கிற அதிகாரப்பூர்வ விவரத்தை சீனா இன்னும் வெளியிடாமல் உள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தை தவிர்த்து மற்ற எந்த மாகாணத்திலும் பாதிப்ப ஏற்படவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதுதான் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல வழக்கறிஞரான ரவி பத்ரா கொரோனா குறித்து கூறியிருப்பதாவது-

கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து உண்மைகளையும் சீனா உலக நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அறிவியலாளர்கள், மருத்துவர்களால் கொரோனாவுக்கு சரியான மருந்தை கண்டுபிடிக்க முடியும். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமல் யாரும் வெளியே போக முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். பத்ராவின் குடும்பத்தில் அவருக்கும், மனைவி ரஞ்சு, மகள் ஏஞ்செலா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பரவல் மையம் முதலில் சினாவின் வுஹானில் இருந்து, ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினுக்கு சென்று தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மையம் கொண்டுள்ளது. இங்கு மட்டும் 1.20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் 12 லட்சத்து 75 ஆயிரத்து 773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 2,63,021 பேர் குணம் அடைந்துள்ளனர். 69,507 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்தியாவை பொறுத்தளவில் தற்போதுவரை 4,067 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 292 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 109 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

-

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.