This Article is From Jan 20, 2020

பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

பொதுவாக பண்டிகை நாட்கள் வந்தால் தமிழகத்தில் மது விற்பனை அதிகரிக்கும். அதிலும் சென்னை, புதுச்சேரி  உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மது விற்கப்படும்.

பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

மொத்தம் ரூ.986 கோடிக்கு மேல் மது விற்பனை ஆக வாய்ப்பு என தகவல்

பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனையானது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்து ரூ.600 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் நாள் தோறும் ரூ.70 முதல் ரூ.80 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கிய பங்கை வகிக்கிறது

பொதுவாக பண்டிகை நாட்கள் வந்தால் தமிழகத்தில் மது விற்பனை அதிகரிக்கும். அதிலும் சென்னை, புதுச்சேரி  உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மது விற்கப்படும். 

அந்தவகையில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் மது விற்பனை களை கட்ட தொடங்கியது. கடந்த 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளில் ரூ.606 கோடிக்கு மது விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

கடந்த 14-ம் தேதி ரூ.178 கோடியே 44 லட்சம், 15-ம் தேதி ரூ.253 கோடியே 39 லட்சம், 17-ம் தேதி ரூ.174 கோடியே 89 லட்சம் என மொத்தம் ரூ.606 கோடியே 72 லட்சத்துக்கு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதத்துக்கு அதிகமாக விற்பனை ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் முடிகிறது. இந்த 2 நாட்களில் சுமார் ரூ.380 கோடி வரை மது விற்பனை ஆகும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் பார்க்கும்போது, பொங்கல் பண்டிகை விடுமுறையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தம் ரூ.986 கோடிக்கு மேல் மது விற்பனை ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

.