This Article is From Jun 08, 2019

என் அப்பாவின் வேலையை மீண்டும் கொடுங்க -36 முறை பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுவன்

2016 ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடிக்கு 13 வயது சிறுவன் கடிதம் எழுதி வருகிறார்.இது வரை 36 முறை கடிதம் எழுதியுள்ள நிலையில் ஒருமுறைகூட எந்த பதிலும் வரவில்லை என்கிறார்.

என் அப்பாவின் வேலையை மீண்டும் கொடுங்க -36 முறை பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுவன்

வேலையில்லாததால் தன்னுடைய குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.

Kanpur:

உத்தரப் பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தன்னுடைய தந்தைக்கு திரும்ப வேலை கிடைக்குமாறு செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு 37 வது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடித்தத்தில் தன்னுடைய தந்தை உத்திர பிரதேச பங்கு பரிவர்த்தனையில் பணிபுரிந்து வந்ததாகும் அவரின் வேலை பறிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் வேலையில்லாததால் தன்னுடைய குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் எடுத்துக் கூறியுள்ளார். மீண்டும் தன் தந்தைக்கு வேலை கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடிக்கு 13 வயது சிறுவன் கடிதம் எழுதி வருகிறார்.இது வரை 36 முறை கடிதம் எழுதியுள்ள நிலையில் ஒருமுறைகூட எந்த பதிலும் வரவில்லை என்கிறார்.

சட்டப்படி தன்னுடைய தந்தைக்கு மீண்டும் வேலைகிடைக்கும்படி செய்யும்மாறு கேட்டுக் கொண்டுள்ளார் இந்த 13 வயது சிறுவன்.

.