This Article is From Oct 10, 2018

“அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம்”- இந்தியாவுக்கு சீனா அழைப்பு

சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 200 பில்லியன் டாலர் அளவுக்கு வரியை விதித்துள்ளது. இதனால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

“அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம்”- இந்தியாவுக்கு சீனா அழைப்பு

சீனா அளித்துள்ள பதில் இந்தியா - சீனா உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இதனை மத்திய அரசு தனியாக எதிர்கொள்கிறதே தவிர, மற்ற நாடுகளுடன் கூட்டு சேரவில்லை. இந்த நிலையில், சீனா விடுத்திருக்கும் அழைப்பானது இந்தியா - சீனா உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், “ தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை பாதிக்காது. ஆனால், இந்தியாவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும்.

சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது என்று கூறியுள்ளார்.
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் 200 பில்லியன் அமெரிக்க டாலரை வரியாக விதித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் சுமார் 60 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை விதித்துள்ளது.

.