This Article is From Aug 16, 2018

தீவிரவாதிகளுடனான மோதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்

எல்லைக் கோட்டுப் பகுதியில் குவியல் குவியலாக துப்பாக்கிகளும், வெடி பொருட்களும் ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டது

தீவிரவாதிகளுடனான மோதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்
Jammu:

 

இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோட்டுக்குள், தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் நான்கு பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை கூறியுள்ளது.

காயமடைந்த அவர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குப்வாரா மாவட்டம், நோவ்காம் செக்டாருக்குள் தீவிரவாதிகள் நுழைய முயன்ற போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. “இந்த தீவிரவாத ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவத்தின் துணையோடு நடந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு கொடுக்க, தீவிரவாதிகள் நுழைய முயன்றனர்” என்றார் ஒரு காவல் துறை அதிகாரி.

மேலும், எல்லைக் கோட்டுப் பகுதியில் குவியல் குவியலாக துப்பாக்கிகளும், வெடி பொருட்களும் ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

.

.