This Article is From Oct 26, 2018

உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 8 பேர் பலி

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 8 பேர் பலி

3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது

Lucknow:

உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இங்குள்ள ரசூல்பூர் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தவறுதலாக வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் தொழிற்சாலைகளின் கூரைகளும் பறந்தன.

இந்த சம்பத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொழிற்சாலைக்கு அருகே சென்று கொண்டிருந்தவர்கள் மீது வெடிகள் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.