This Article is From Aug 26, 2020

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரும் 7 மாநில அரசுகள்: ஸ்டாலின் வரவேற்பு

நீட் தேர்வை எதிர்ப்பதாக தொடர்ந்து நாடகம் ஆடி ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அதிமுக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது?

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரும் 7 மாநில அரசுகள்: ஸ்டாலின் வரவேற்பு

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரும் 7 மாநில அரசுகள்: ஸ்டாலின் வரவேற்பு

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய ஏழு மாநில முதலமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் வரவேற்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பஞ்சாப்  முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஸ்கர்  முதல்வர் பூபேஷ் பாஹல், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய ஏழு மாநில முதலமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாதவது, கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு, ஏழை - எளிய பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமையும். இத்தகைய தேர்வுகளை நடத்துவதில் மட்டும் மும்முரமாக இருப்பதை ஏழு மாநில அரசுகள் எதிர்ப்பதை இந்திய நாடே மனப்பூர்வமாக வரவேற்கும்.

பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை ஆளும் முதல்வர்களை மனமாரப் பாராட்டுகிறேன்; வணங்குகிறேன், இதற்கான முயற்சியை அக்கறையுடன் எடுத்த  சோனியா காந்திக்கும் எனது நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

நீட் தேர்வை எதிர்ப்பதாக தொடர்ந்து நாடகம் ஆடி ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அதிமுக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால்; மாணவர்கள் மீதான அக்கறை உண்மையானால்; தமிழக அரசும் மற்ற மாநில அரசுகளைப் போல உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில், அதுவும் அனைவரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் இந்தக் கட்டத்தில், மாணவ - மாணவியரைத் தேர்வுகள் மூலம் துன்புறுத்துவதை ஒத்திவைப்பதாவது, நீட் ரத்துக்கான தொடக்கமாக அமையட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.