This Article is From Oct 23, 2018

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர்

சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட முதியவரை கைது செய்துள்ளனர்

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர்

சிறுமிக்கு ஆசை காட்டி குற்றத்தில் முதியவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Tripura:

திரிபுராவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு வடக்கு திரிபுரா மாவட்டத்தில் முதியவர் ஒருவர் 4 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார்.

சாக்லேட் வாங்கித் தந்த பின்னர், சிறுமியை அந்த முதியவர் பலாத்காரம் செய்திருக்கிறார். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

.