This Article is From Nov 26, 2019

TN Rain Alert - 8 மாவட்டங்களுக்கு மழை… 3 மாவட்டங்களுக்கு கனமழை..!

Tamilnadu Rain Alert - குமரிக்கடல் பகுதியில் சூறைக் காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் குமரிக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

TN Rain Alert - 8 மாவட்டங்களுக்கு மழை… 3 மாவட்டங்களுக்கு கனமழை..!

Tamilnadu Rain Alert - கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்யாறில் அதிகபட்சமாக 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது

Tamilnadu Rain Alert - தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், 

ராநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

குமரிக்கடல் பகுதியில் சூறைக் காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் குமரிக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்யாறில் அதிகபட்சமாக 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

.