This Article is From Sep 16, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.15) கொரோனா நிலவரம்!

இன்று 5,735 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,58,900 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.15) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 68 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 78,711 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,502 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,735 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,58,900 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 46,806பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,50,572 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 9883 பேர சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,004 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,530 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்று (செப்.15) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 26

செங்கல்பட்டு - 324

சென்னை - 989

கோவை - 485

கடலூர் - 268

தர்மபுரி - 88

திண்டுக்கல் - 61

ஈரோடு -135

கள்ளக்குறிச்சி - 127

காஞ்சிபுரம் - 198

கன்னியாகுமரி - 103

கரூர் - 61

கிருஷ்ணகிரி - 75

மதுரை - 83

நாகை - 111

நாமக்கல் - 97

நீலகிரி - 85

பெரம்பலூர் -26

புதுக்கோட்டை - 63

ராமநாதபுரம் - 26

ராணிப்பேட்டை - 92

சேலம் - 292

சிவகங்கை - 28

தென்காசி - 56

தஞ்சை - 160

தேனி - 81

திருப்பத்தூர் - 74

திருவள்ளூர் -283

திருவண்ணாமலை - 189

திருவாரூர் - 129

தூத்துக்குடி - 84

திருநெல்வேலி - 117

திருப்பூர் - 262

 திருச்சி - 103

வேலூர் - 134

விழுப்புரம் - 134

விருதுநகர் - 41

.