This Article is From Sep 15, 2020

தமிழகத்தில் மேலும் 5,752 பேருக்கு கொரோனா, 53 பேர் பலி!

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,752 பேருக்கு கொரோனா, 53 பேர் பலி!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 53 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 78,190  பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,434 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,799 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,53,165 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 46,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,49,583 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 10,436 பேர சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,992 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 940 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

.