This Article is From Jul 24, 2018

நெடுந்தீவு அருகே 7 தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு விசைப்படகுகளில் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர்

நெடுந்தீவு அருகே 7 தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து காங்கேசன் துறைமுகம் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு விசைப்படகுகளில் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று காலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லி சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும், அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துவருவதால், மீனவ கிராமங்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.