This Article is From Jul 18, 2018

சென்னை சிறுமியை தொடர்ந்து திருவண்ணாமலையில் ரஷ்ய இளம் பெண் பாலியல் பலாத்காரம்

திருவண்ணாமலையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை சிறுமியை தொடர்ந்து திருவண்ணாமலையில் ரஷ்ய இளம் பெண் பாலியல் பலாத்காரம்
Chennai:

திருவண்ணாமலையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்தில், பணிபுரிந்து வந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

21 வயதான அந்த பெண், தனது அறையில் மயங்கிய நிலையில் கிடைந்துள்ளார். அங்கிருந்த சிலர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரது உடலில் கடிக்கப்பட்ட காயங்கள் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

போதை பொருட்களை பயன்படுத்தியதால் அந்த பெண் மயங்கிய நிலையில் இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மொழி பெயர்ப்பாளர் மூலம், அந்த பெண்ணிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

அந்த விருந்தினர் இல்லத்தின் உரிமையாளர், அவரது சகோதரர், பணியாளர் மற்றும் டாக்ஸி ஓட்டுநர் என 4 பேரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த பெண், இந்த இல்லத்தில் ஒரு வாரமாக தங்கி வந்திருப்பது தெரியவந்துள்ளது. இப்போது மயக்கத்தில் இருந்து மீண்ட அந்த பெண்ணிடம், விசாரணை நடந்து வருவதாக காவல் துறை கூறியுள்ளது. 

சென்னையில் 11 வயது சிறுமி 17 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான கொடூரத்தை தொடர்ந்து, திருவண்ணாமலையில் ரஷ்ய பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

.