This Article is From Jan 24, 2019

மனிதர்களின் அட்டூழியம் - பதறவைக்கும் புகைப்படம்

தாய்லாந்தில் புலி ஒன்றை வேட்டையாடி, அந்த புலியின் மீது அந்த வேட்டைகாரர் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களின் அட்டூழியம் - பதறவைக்கும் புகைப்படம்

வேட்டையாடப்பட்ட புலியின் மீது வேட்டைகாரர்

தாய்லாந்தில் புலி ஒன்றை வேட்டையாடி, அந்த புலியின் மீது அந்த வேட்டைகாரர் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட விலங்குகளை வேட்டையாடும் குழுவினர், வியாட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் செல்போனில் தான் அந்த புகைப்படம் இருந்தது என்றும் தாய்லாந்த் போலீஸ் கூறினர்.

 

 
 

 

அவர்களை கைதுசெய்யும் போது, அவர்களின் காரில் ஒரு புலியின் எலும்புகூடு இருந்தது என்றும் அவர்கள் நான்கு நாடுகளில் இந்த விலங்குகள் வேட்டையில் ஈடுப்படுகிறார்கள் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு வேட்டைகாரர் வேட்டையாடப்பட்ட புலியின் மீது அமர்ந்து அந்த புலியை குத்துவது போல் இருக்கும் புகைப்படம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெயிலி மெயில் செய்தியின் படி, புலிகளின் தோல் மற்றும் எலுப்புகள் வியாட்நாம் போன்ற நாடுகளின் கள்ள சந்தையில் அதிகம் விற்கப்படுகிறது.

இந்த வேட்டைகாரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என பல தரப்பு மக்கள் கூறிவருகின்றனர்.

 

Click for more trending news


.