This Article is From Jan 04, 2019

‘அவர்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லணும்!’- பாஜக எம்.எல்.ஏ பகீர்

நாட்டில் யாரெல்லாம் பாதுகாப்பு இல்லையென்று கருதுகிறார்களோ, அவர்களை வெடிகுண்டு வைத்துக் கொன்று விடுவேன் என பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சயினி பேசியுள்ளார்

‘அவர்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லணும்!’- பாஜக எம்.எல்.ஏ பகீர்

இந்த நாட்டின் மீது பற்றில்லை என்றால், எதற்காக இருக்கிறீர்கள்- விக்ரம் சயினி

Lucknow:

நாட்டில் யாரெல்லாம் பாதுகாப்பு இல்லையென்று கருதுகிறார்களோ, அவர்களை வெடிகுண்டு வைத்துக் கொன்று விடுவேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சயினி பேசியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று சொல்லும் துரோகிகள், சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை அப்படிப்பட்டவர்களை வெடிகுண்டு வைத்துக் கொல்ல வேண்டும். நமது நாட்டின் மாண்பை அவர்களுக்கு மதிக்கத் தெரியவில்லை என்றால், தாரளமாக வெளிநாட்டுக்குச் சென்றுவிடலாம். 

எனக்கு அமைச்சராக சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள், அப்படிப்பட்ட அனைவரையும் வெடிகுண்டு போட்டுக் கொல்கிறேன். இந்த நாட்டின் மீது பற்றில்லை என்றால், எதற்காக இருக்கிறீர்கள். எங்கு அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களோ, அங்கு சென்று விடலாமே?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

பாலிவுட் நடிகர் நசருதீன் ஷா, சில நாட்களுக்கு முன்னர், ‘எனது குழந்தைகளின் நிலையை நினைத்தால் பயமாக உள்ளது. நாட்டில் ஒரு மனிதனின் இறப்பைவிட, மாட்டின் இறப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது' என்று கூறி, நாட்டில் பாதுகாப்பாக உணரவில்லை என்றார். இதற்கு வலதுசாரி அமைப்பினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விக்ரம் சயினியும் அது குறித்து பகீர் கிளப்பும் வகையில் தகவல் கூறியுள்ளார். 

.