This Article is From Apr 30, 2020

குழப்பத்தில் மக்கள்; ஊரடங்கு நீக்கமா? நீட்டிப்பா? தாமதிக்காமல் அறிவியுங்கள்: ஸ்டாலின்

அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்துக் கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும்.

குழப்பத்தில் மக்கள்; ஊரடங்கு நீக்கமா? நீட்டிப்பா? தாமதிக்காமல் அறிவியுங்கள்: ஸ்டாலின்

குழப்பத்தில் மக்கள்; ஊரடங்கு நீக்கமா? நீட்டிப்பா? தாமதிக்காமல் அறிவியுங்கள்: ஸ்டாலின்

ஹைலைட்ஸ்

  • குழப்பத்தில் மக்கள்; ஊரடங்கு நீக்கமா? நீட்டிப்பா?
  • தாமதிக்காமல் அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
  • கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று மக்கள் குழப்பத்தில் உள்ள நிலையில், தாமதிக்காமல் முடிவை அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் கடந்த மார்ச்.25ம் தேதி முதல் 21 நாள் முழு ஊரடங்கை அறிவித்தார். தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், ஏப்ரல் 14க்குப் பிறகு மே.3 வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார்.

இதையடுத்து, தற்போது 40 நாள் ஊரடங்கு முடிவடைய 3 நாட்களே உள்ள நிலையில், மே.3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் பெரும் குழுப்பம் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "கொரோனா நோய்த் தொற்று பரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு முடிவடைகிற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது.

கொரோனா பரவலைத் தடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்காக, மத்திய - மாநில அரசுகள் எடுக்கின்ற எந்த முடிவாக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு சமூக ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும்.

அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்துக் கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும்.

35 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களின் மனநிலையையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய - மாநில அரசுகள் உரிய முடிவெடுத்து சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

.