This Article is From Mar 09, 2019

இந்தியாவுக்குள் புகுந்து உளவு பார்த்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீநகங்கா நகர் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் வந்து சென்றிருப்பதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்குள் புகுந்து உளவு பார்த்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்

எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்த நிலையில் ட்ரோன் திரும்பிச் சென்றுள்ளது.

இந்தியா  - பாகிஸ்தான் இடையே பதற்றம் இருந்து வரும் நிலையில் பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் உளவு விமானம் இந்தியாவுக்குள் வந்து சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தான் எல்லையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதிகாலையில் சுமார் 5 மணியளவில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்ரீகங்காநகர் என்ற இடத்தில் ஆளில்லா ட்ரோன் விமானம் வந்துள்ளது.

இதனை எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணித்தபோது அது பாகிஸ்தானை சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ட்ரோனை சுட்டு வீழ்த்த எல்லை பாதுகாப்பு படையினர் முயற்சி செய்தனர். இருப்பினும், ட்ரோன் விமானம் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டது.

விமானத்தின் சத்தத்தை கிராம மக்களும் உணர்ந்துள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானம் இந்தியாவுக்குள் வந்து உளவு பார்த்து சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.