This Article is From Jan 25, 2019

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

120 எம்.எம். மற்றும் 81 எம்.எம். மோர்ட்டார் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

Jammu:

ஜம்மு காஷ்மீரின் ரஜவ்ரி மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. காலை 9.15 மணி முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தின்போது, 120 எம்.எம். மற்றும் 81 எம்.எம். மோர்ட்டார் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறது. 

குறிப்பாக பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

.