This Article is From Oct 16, 2019

INX Media Case: திகார் சிறையில் விசாரணை! - ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

INX Media Case: கடந்த செப்.5ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறை கைது செய்ய விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்றைய தினம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

INX Media Case: திகார் சிறையில் விசாரணை! - ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்காக கடந்த செப்.5ம் தேதி முதல் ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் உள்ளார்.

New Delhi:

ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையை தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த செப்.5ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறை கைது செய்ய விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்றைய தினம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, அமலாக்கத்துறை, சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது. இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது. 

இதனிடையே, இன்று காலை ப.சிதம்பரத்தின் மனைவி, நளினி சிதம்பரம் மற்றும் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தை நேரில் சந்தித்து சென்றனர். 

தந்தை ப.சிதம்பரத்தை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், 74 வயதான அவர் நல்ல உற்சாகமுடன் இருக்கிறார். இந்த நடைமுறை விளையாட்டுகள் அனைத்தும் அரசியல் நாடகங்களுக்காக நடத்தப்படுகிறது. இது ஒரு போலியான விசாரணை என்று அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ப.சிதம்பரம், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, சிபிஐ தன்னை "அவமானப்படுத்தவே" சிறையில் வைத்திருப்பதாகக் கூறினார்.

மேலும், "தன்னை 60 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்.. என்றவர், சிபிஐ காவலில் இருக்கும்போதே அவர் அமலாக்கத்துறையினரிடம் சரணடைய விரும்புவதாக அவரது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தது. பின்னர், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

.