This Article is From Jun 14, 2019

கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் - வைரல் வீடியோ

பணத்தை உடனடியாகத் திரும்பக் கேட்டு மின்கம்பத்தில் கட்டி வைது அடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் - வைரல் வீடியோ

இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து 7 பேரை இதுவரை கைது செய்துள்ளது.

Bengaluru:

கர்நாடகாவில் ரூ.50,000 கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பாலும் துடைப்பத்தாலும் அடித்து உள்ளனர். 

ராஜாமணி சாமராஜ்நகர் மாவட்ட கொலிகல் என்ற பகுதியில் வசித்து வருகிறார். அந்தப் பகுதியில் சிறிய உணவகம் ஒன்றையும் சிட் பண்ட் தொழிலையும் செய்து வருகிறார். ரூ. 50,000 ஐ அங்குள்ள மக்களுக்கு கடனாக கொடுத்துள்ளார். வாங்கியவர்கள் கடனை செலுத்தாதால் ராஜமணியால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. 

பணத்தை உடனடியாகத் திரும்பக் கேட்டு மின்கம்பத்தில் கட்டி வைது அடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து 7 பேரை இதுவரை கைது செய்துள்ளது. 

.