This Article is From Apr 02, 2019

‘மிஷன் சக்தி’ தோதனையால் விண்ணில் மிதக்கும் 400 குப்பைத் துண்டுகள்: நாசா காட்டம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பூமியைச் சுற்றி மிதந்து வரும் விண் துண்டுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

‘மிஷன் சக்தி’ தோதனையால் விண்ணில் மிதக்கும் 400 குப்பைத் துண்டுகள்: நாசா காட்டம்!

24 துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்தாகும் வகையில் விண்ணில் மிதந்து வருகின்றன- நாசா

Washington:

செயற்கைக்கோளை குறி பார்த்துத் தாக்கும் ஏவுகணைச் சோதனையை இந்தியா சில நாட்களுக்கு முன்னர் செய்தது. ‘மிஷன் சக்தி' என்று சொல்லப்படும் இந்த சோதனையின் மூலம் இந்தியாவின் இறையாண்மை விண்ணிலும் பாதுகாக்கப்படும் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், இந்த சோதனையின் மூலம் விண்ணில் 400 குப்பைத் துண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது நல்ல விஷயம் அல்ல என்றும் நாசா அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் அங்கு இருக்கும் விண்வெளி வீரர்களுக்கும் இந்த குப்பைத் துண்டுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது நாசா.

இது குறித்து நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரடென்ஸ்டைன், ‘செயற்கைக்கோளை அழிப்பதற்காக இந்தியா நடத்திய சோதனை மிகவும் மோசமானது. இதனால், தற்போது பூமியின் மேற்பரப்பில் 400 குப்பைத் துண்டுகள் மிதக்கின்றன. ஏவுகணையை செலுத்தி செயற்கைக்கோளை அழித்த இந்தியாவின் சோதனையால், கோள் சிதறியது. அப்படிச் சிதறியதில் அனைத்துக் குப்புகளையும் நம்மால் கண்டுபிடித்து விட முடியாது. 10 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவு கொண்ட துண்டுகளை மட்டும்தான் தற்போது நாம் கண்டுபிடித்து வருகிறோம். அப்படி 60 துண்டுகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

24 துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்தாகும் வகையில் விண்ணில் மிதந்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் விண்ணில் மனிதர்களை அனுப்புவது ஆபத்தானதாக மாறும். இதைப் போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது' என்று காட்டமாக பேசியுள்ளார். 

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பூமியைச் சுற்றி மிதந்து வரும் விண் துண்டுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. இதுவரை 10 சென்டி மீட்டருக்கும் அகலமான 23,000 துண்டுகள் விண்ணில் மிதந்து வருகின்றன.

இதில் 10,000 குப்பைத் துண்டுகளும் அடங்கும். இதில் 3,000 துண்டுகள் ஒரே நிகழ்வில் வந்தது. சீனா, கடந்த 2007 ஆம் ஆண்டு 530 மைல் தொலைவில் இருந்த ஒரு செயற்கைக்கோளை அழித்து சோதனை செய்தது. அப்போதுதான் 3,000 குப்பைத் துண்டுகள் உருவாகின.

விண்ணில் மிதக்கும் குப்பைத் துண்டுகளில் பெரும்பாலனவை, பூமியை நோக்கி வரும்போது அது எரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

.