This Article is From Aug 08, 2018

எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்

முக்கிய தேசிய தலைவர்களான பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செலுத்த இன்று சென்னை வருகின்றனர்

எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்
Chennai:

சென்னை: உடல் நலக் குறைவால் தொடர்ந்து சிக்கிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதால், நேற்று மாலை 6.10 மணிக்கு இயற்கை ஏய்தினார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லுடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முக்கிய மாநில அமைச்சர்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் டி.டி.வி தினகரன், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கருணாநிதியின் உடலுக்கு இன்று காலை மரியாதை செலுத்தினர்.

“தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். மேலும், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

முக்கிய தேசிய தலைவர்களான பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செலுத்த இன்று சென்னை வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

.