This Article is From Jul 07, 2020

புல்வாமாவில் பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை! ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!

மற்றொரு பதிவில், #புல்வாமா என்கவுண்டர் அப்டெட்: இதுவரை ஒரு அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமாவில் பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை! ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!

புல்வாமாவில் பயங்கரவாதி என்வுண்டரில் சுட்டுக்கொலை! ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!

ஹைலைட்ஸ்

  • புல்வாமாவில் பயங்கரவாதி என்வுண்டரில் சுட்டுக்கொலை!
  • இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!
  • ஒரே மாதத்தில் 48 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்
Pulwama:

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் இன்று காலை தீவிரவாதிகள் உடனான மோதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை 183 பட்டாலியன், ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் உள்ளிட்டோர் மேற்கொண்ட கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை இன்று அதிகாலை 5:30 மணியளவில் தொடங்கியது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது ஒரு ராணுவ வீரரும், ஒரு காவலரும் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக காஷ்மீர் மண்டல காவல்துறை தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, புல்வாமாவின் கோசு பகுதியில் இந்த என்கவுண்டர் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பணியில் உள்ளனர். மேலும், விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றொரு பதிவில், #புல்வாமா என்கவுண்டர் அப்டெட்: இதுவரை ஒரு அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்னாக் பகுதியில் 6 வயது சிறுவன் மற்றும் சிஆர்பிஎப் வீரரையும் கொன்ற பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 

கடந்த ஜூன் 26ம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், சாகித் தாஸ் என்ற அந்த பயங்கரவாதி தப்பிச்சென்றுள்ளார். தொடர்ந்து, ஸ்ரீநகர் என்கவுண்டரின் போது, சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் உயிரிழந்தார். 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், வெவ்வேறு என்கவுண்டரில் நாற்பத்தி எட்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 
 

.