சரவண பவன் உள்ளிட்ட பல்வேறு உணவகங்களில் இன்று வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஹைலைட்ஸ்
- சரவண பவன், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட்ஸ், அஞ்சப்பர் அலுவலங்களில் சோதனை
- ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநர்கள் வீடுகள் உட்பட 32 இடங்களில் சோதனை மேற்கொ
- வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து சோதனை மேற்கொள்வதாக அதிகா
சென்னையில் சரவண பவன் குழுமம் உட்பட பிரபல 5 ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனையானது, சரவண பவன், ஹாட் பிரட்ஸ், அஞ்சப்பர் குழுமம் மற்றும் கிராண்ட் ஸ்வீட்ஸ் குழுமம் உள்ளிட்ட பிரபல 5 ஹோட்டல்களின் அலுவலகங்கள் உட்பட 32 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், இந்த ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
கடந்த சில வருடங்களாக இந்த ஹோட்டல்கள் பெரும் அளவிவல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தீவிர விசாரணைக்கு பின்பே மதிப்பீடு குறித்த விவரங்கள் தெரியவரும்.
மற்ற 5 ஹோட்டல்களை காட்டிலும், சரவண பவன் மிகப்பெரிய ஹோட்டல் ஆகும். தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்ட சரவண பவன், அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளிலும் அதன் கிளைகளை கொண்டுள்ளது.
இதேபோல், அஞ்சப்பர் குழுமமும் இந்தியா முழுவதும் 70க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. ஹாட் பிரட்ஸ் பேக்கரியானது, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் அதன் கிளைகளை கொண்டுள்ளது. கிராண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனமானது கடந்த 25 வருடங்களாக தனது தொழிலை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.