Breaking News: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 54 லட்சத்தினை கடந்தது!!
Breaking News
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 54 லட்சத்தினை கடந்தது!!

முதன் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 லட்சத்துக்கம் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 92,605 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 1,133 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 54,00,619 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 86,752 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 10,10,824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை  43,03,043 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே போல ஒரே நாளில் 94,612 குணமடைந்துள்ளனர்.

இதுவரை 6.36 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 லட்சம் பேருக்க பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

This is a breaking news story. Details will be added soon. Please refresh the page for latest version.

.