This Article is From Jun 28, 2019

சென்னை, சேலம் மாவட்டம் உட்பட 7 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சென்னை இசைப் பல்கலைக்கழக பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை, சேலம் மாவட்டம் உட்பட 7 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் சென்னை, சேலம் மாவட்ட ஆட்சியர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மாற்றப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்:

1. அரியலூர் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகிக்கும் விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டினி வினய்  அரியலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

3. சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

4. வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சி.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

5. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சென்னை இசைப் பல்கலைக்கழக பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.

6. சென்னை இசைப் பல்கலைக் கழக பதிவாளர் சீதாலட்சுமி சென்னை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

7. தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலர் டி.எஸ் ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். இந்த் உத்தரவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார். 

.