This Article is From Dec 21, 2019

“அமமுகவோடு ADMK எப்படி இணையும் தெரியுமா..?”- ஸ்கெட்ச் போடும் டிடிவி தினகரன்!

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த முக்கிய காரணமே, ஜெயலலிதாவின் ஆட்சியை மீட்டெடுப்பதற்காகத்தான்" - TTV Dhinakaran

“அமமுகவோடு ADMK எப்படி இணையும் தெரியுமா..?”- ஸ்கெட்ச் போடும் டிடிவி தினகரன்!

"தற்போது ஆட்சி அதிகாரமும், பதவி பலமும் தங்களிடம் இருப்பதனால் தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள் அவர்கள்"- TTV Dhinakaran

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக எப்படி தங்கள் இயக்கத்தோடு இணைக்கப்படும் என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார். மேலும் அவர், இன்றைய அதிமுகவில் பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் வருங்காலத்தில் அவர்களின் செயல்களுக்காக பதில் சொல்ல வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதிமுக தலைமையிலான ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் வரை அனைவரையும் விமர்சித்த தினகரன், “தினம் தினம், அமமுகவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அதிமுகவில் இணைவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் சொல்லி வருகின்றனர். அப்படியென்றால், எங்கள் கட்சியில் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள் இல்லையா. 

ttv dhinakaran party launch pti 650

தற்போது ஆட்சி அதிகாரமும், பதவி பலமும் தங்களிடம் இருப்பதனால் தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள் அவர்கள். எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். கண்டிப்பாக அவர்களில் செயல்களுக்காக ஒருநாள் பதில் சொல்ல வேண்டி வரும்,” என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார். 

தொடர்ந்து, ‘அதிமுக - அமமுக இணைப்பு' பற்றி பேசிய தினகரன், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த முக்கிய காரணமே, ஜெயலலிதாவின் ஆட்சியை மீட்டெடுப்பதற்காகத்தான். ஜனநாயக நாட்டில் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றுத்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். 

ஆட்சிக்கு நாங்கள் வந்தவுடன், அதிமுகவை எங்களோடு இணைப்போம். இந்த இயக்கமே துரோகிகளிடம் இருக்கும் அதிமுகவை மீட்டெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,” என்று உறுதிபட பேசியுள்ளார். 


 

.