This Article is From Nov 25, 2019

Heavy Rain Alert - நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- தமிழகத்தில் மழை தொடரும்!

"கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடத்தில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது"

Heavy Rain Alert - நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- தமிழகத்தில் மழை தொடரும்!

"குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீச உள்ளதால், மீனவர்கள் 2 நாட்களுக்கு அங்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்"

Heavy rain for Tamilnadu - தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் நிலவி வரும் நிலையில், மாநில அளவில் பரவலாக மழை பெய்வது தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர், புவியரசன், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடத்தில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீச உள்ளதால், மீனவர்கள் 2 நாட்களுக்கு அங்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று விரிவாகக் கூறினார். 

.