This Article is From Nov 14, 2018

இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 - டி2 ராக்கெட்

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது

இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 - டி2 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் வைத்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நிறுவனம், தகவல் தொடர்புக்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க் -3 - டி2 என்ற தகவல் தொழில்நுட் ராக்கெட்டை தயாரித்துள்து. இந்த ராக்கெட், ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதனை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் நேற்று பகல் 2.50-க்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ராக்கெட்டின் மூலம் ஜிசாட் - 29 செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்படும். இது 3,423 கிலோ எடை கொண்டது.

இந்த நிலையில் இன்று மாலை 5:08-க்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் 5-வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

.