This Article is From Nov 28, 2019

கோட்சே தேசபக்தர் என்ற கருத்தியலை பாஜக கண்டிக்கிறது : ராஜ்நாத் சிங்

கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று அழைப்பதையும் இதுபோன்ற கருத்தியலையும் கண்டிக்கிறோம். மகாத்மா காந்தியின் சித்தாந்தம் முன்பு இருந்ததைப் போல் இன்றும் உள்ளது என்று தெரிவித்தார். மகாத்மா காந்தியின் சித்தாத்தம்தான் நாட்டிற்கு வழிகாட்டி தொடந்து பின்பற்றுவோம் எனத் தெரிவித்தார்.

மக்களவையில் இதுபோன்ற கருத்துகளை பிரக்யா தகூர் பேசுவதற்கு எவ்வாறு துணிச்சல் வந்தது. -காங்கிரஸ் கேள்வி

New Delhi:

காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்ற கருத்தியலை பாஜக கண்டிக்கிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் போபால் எம்.பி பிரக்யா தகூர் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டதாக அறிக்கை வெளியானது. 

கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று அழைப்பதையும் இதுபோன்ற கருத்தியலையும் கண்டிக்கிறோம். மகாத்மா காந்தியின் சித்தாந்தம் முன்பு இருந்ததைப் போல் இன்றும் உள்ளது என்று தெரிவித்தார். மகாத்மா காந்தியின் சித்தாத்தம்தான் நாட்டிற்கு வழிகாட்டி தொடந்து பின்பற்றுவோம் எனத் தெரிவித்தார். மக்களவை இன்று தொடங்கி அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதும் மக்களவையில் நேற்று பாஜக எம்.பி பிரக்யா தக்கூர் ‘கோட்சே தேசபக்தர்' என்று பேசிய விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர். 

ruta48bo

அப்போது காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “"பாஜக எம்.பி. பிரக்யா தகூர், கோட்சேவை தேசபக்தர் என்றும், காங்கிரஸ் கட்சியை தீவிரவாதக் கட்சி என்றும் பேசியிருக்கிறார். தேசத்துக்கு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். மக்களவையில் இதுபோன்ற கருத்துகளை பிரக்யா தகூர் பேசுவதற்கு எவ்வாறு துணிச்சல் வந்தது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறோம். 

மகாத்மா காந்தி மற்றும் நேருவின் பெயரைப் பயன்படுத்தி, பாஜக அரசியல் செய்ய முயல்கிறது. பாஜகவின் சித்தாந்தத்தால்தான் பிரக்யா தகூர் இதுபோன்ற கருத்துகளைப் பேசியிருக்கிறார்" எனத் தெரிவித்தார். 

அப்போது, அவைத்தலைவர் ஓம் பிர்லா பேசுகையில், "பிரக்யா தாக்கூரின் பேச்சு அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. இதில் விவாதிக்க வேண்டாம்" என்றார். “நாதுராம் கோட்சே பற்றிய எனது கருத்திற்கு நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது கருத்து முற்றிலும் தவறானது. தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” என்று பிரக்யா தகூர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார். 

.