This Article is From Nov 07, 2018

மது போதையில் 18 வாகனங்களுக்கு நெருப்பு வைத்த நபர் : போலீசார் வழக்கு பதிவு

டெல்லியில் குடி போதையில் 18 வாகனங்களுக்கு நெருப்பு வைத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்

மது போதையில் 18 வாகனங்களுக்கு நெருப்பு வைத்த நபர் : போலீசார் வழக்கு பதிவு

குடி போதையில் 18 வாகனங்களுக்கு நெருப்பு வைத்த நபர்

New Delhi:

கடந்த செவ்வவாயன்று, டெல்லியின் தெற்குபகுதியில் உள்ள மதன்கிர்ரில் என்னுமிடத்தில் மது போதையில் 18 வாகனங்களுக்கு நெருப்பு வைத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

போலீசாரிடம் உள்ள அந்த வீடியோ ஆதாரத்தில், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்த நபர், அங்குள்ள வாகனங்களின் பெட்ரோல் பைப்பை முழுமையாக திறந்து அதற்கு நெருப்பு வைத்தார்.

பெட்ரோல் பைப்லைன் நிரம்பி வழிந்ததால் அருகில் இருந்த மற்ற வாகனங்களும் இந்த சம்பவத்தால் தீ பற்றி எரிந்தன.

இந்நிலையில் சம்பவத்தை அறிந்து போலீசார் அங்கு செல்வதற்கு முன் அந்த நபர் தப்பிச் சென்று விட்டார்.

இந்த அசம்பாவிதத்தால் எட்டு இருசக்கர வாகனங்களும் இரண்டு கார்களும் முழுமையாக தீ பற்றிய நிலையில், அருகில் இருந்த ஆறு இருசக்கர வாகனமும் இரண்டு கார்களும் ஆங்காங்கே தீயால் பாதிக்கப்பட்டிருந்தன.

.