This Article is From Jul 01, 2019

டிஜிட்டல் இந்தியா ஊழலைக் குறைக்க மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது : பிரதமர் மோடி

இந்த நாளில் 4 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் இந்தியா தொடங்கப்பட்டது. தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவதற்கும் தொழில் நுட்பத்தை அணுகுவதற்கும் டிஜிட்டல் இந்தியா மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா ஊழலைக் குறைக்க மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது : பிரதமர் மோடி

டிஜிட்டல் இந்தியாவை வலுப்படுத்துவதற்கு உழைக்கும் அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்

New Delhi:

பிரதமர் மோடி தலைமையிலான முதன்மை திட்டமான டிஜிட்டல் இந்தியாவின் நான்காவது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஊழலைக் குறைக்க மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது என்று தெரிவித்தார். ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் பொது சேவை வழங்கலை மேம்படுத்தியுள்ளது என்று கூறினார். 

இந்த நாளில் 4 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் இந்தியா தொடங்கப்பட்டது. தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவதற்கும் தொழில் நுட்பத்தை அணுகுவதற்கும் டிஜிட்டல் இந்தியா மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியான மக்கள் இயக்கமாகும். இது மக்களின் பலம் மற்றும் கற்றுகொள்வதற்கும் புதுமைப்படுத்துவதற்கும் மக்கள் மேற்கொண்ட முயற்சியினால் இயக்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியாவை வலுப்படுத்துவதற்கு உழைக்கும் அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். மேலும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். 

இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயமாகவும் அறிவு பொருளாதாரமாகவும் மாற்றும் நோக்குடன் இந்திய அரசு ஜூலை 1, 2015 அன்று தொடங்கப்பட்டது. 

.