This Article is From May 01, 2019

ஃபனி புயல்: ஒடிசாவில் 11 மாவட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டது! #Live updates

Cyclone Fani: மே.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் மட்டும் முக்கியமில்லாத பயணங்களை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Cyclone Fani: மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

New Delhi:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி (Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசா கடற்கரை நெருங்கி வருகிறது. இதனால், வானிலை மையத்தால் ஒடிசா மாநிலத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஒடிசா அரசு நாளை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ஃபனி புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருக்க கடலோர மாவட்டங்களில் தேர்தல் விதிமுறைகளை தளர்த்தி தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. ஃபனி (Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது என கடற்படை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த ஃபனி புயலானது, வெள்ளியன்று மாலை ஒடிசா கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம், ஆந்திர உள்ளிட்ட கடலோர பகுதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒடிசாவில் புரி, ஜகத்சிங்பூர், கேந்திராபாரா, பாத்ராக், பாலாசோர், மாயூர்பாஞ், கஜபதி, கஞ்சம், கோர்தா, கட்டாக் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள தேர்தல் விதமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புரியிலிருந்து சுற்றுலா பயணிகள் நாளை மாலைக்குள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மே.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் மட்டும் முக்கியமில்லாத பயணங்களை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆந்திரபிரதேசம், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் விமானப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 41 இடங்கள் பாதிப்பு மிகுந்த பகுதியாக இருக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஆந்திரவில் (8), ஒடிசா (28), மேற்குவங்கம் (5). இதன் காரணமாக 13 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மேற்குவங்கம் மற்றும் ஆந்திராவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஃபனி புயலை எதிர்கொள்வது குறித்து தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவானது இரண்டவது நாளாக நேற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

புயல் கரையை கடக்கும் போது, தாழ்வுநிலை பகுதிகளான கஞ்சம், குர்தா, புரி, ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் எற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

10 லட்சம் மக்கள் வரை தங்கும் வகையிலான 879 முகாம்கள் ஒடிசாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடலில் இருக்கும் மீனவர்கள் விரைந்து கரைக்கு வரும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஃபனி புயலால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சில பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது, தாழ்வுநிலை பகுதிகளான கஞ்சம், குர்தா, புரி, ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் எற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஃபனி புயல் குறித்த தீவிரமாக கவனித்து வரும் பிரதமர் மோடி, மாநில அரசுகளுடன் தொடர்பில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடச் சொல்லி தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

(With inputs from PTI, ANI and IANS)

.