This Article is From Aug 03, 2020

சென்னையில் கொரோனா வைரஸ்: ஆகஸ்ட் 3 ஆம் தேதி மண்டல வாரியான நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87,604 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ்: ஆகஸ்ட் 3 ஆம் தேதி மண்டல வாரியான நிலவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,394 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட 86% பேர் டிஸ்சார்ஜ்
  • இதுவரை சென்னையில் 2,157 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
  • நேற்று மட்டும் சென்னையில் 1,303 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்

தமிழகத்தில் நேற்று 5,875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,065 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,57,613 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,517 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,96,483 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 56,998 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 4,132 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (03.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 460

மணலி - 113

மாதவரம் - 638

தண்டையார்பேட்டை - 666

ராயபுரம் - 837

திரு.வி.க நகர் - 944

அம்பத்தூர் - 1,338

அண்ணா நகர் - 1,288

தேனாம்பேட்டை - 918

கோடம்பாக்கம் - 1,394

வளசரவாக்கம் - 926

ஆலந்தூர் - 566

 அடையாறு - 1,011

பெருங்குடி - 515

சோழிங்கநல்லூர் - 459

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 117

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87,604 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 86 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,157 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 12,190 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,303 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,394 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அம்பத்தூர் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,338 மற்றும் 1,288 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 113 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

.