This Article is From Aug 11, 2020

சென்னை கொரோனா தொற்று அப்டேட்: 88% ஆக உயர்ந்த டிஸ்சார்ஜ் விகிதம்; மண்டலவாரியான விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96,466 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னை கொரோனா தொற்று அப்டேட்: 88% ஆக உயர்ந்த டிஸ்சார்ஜ் விகிதம்; மண்டலவாரியான விவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,619 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,305 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்
  • தற்போது 11,328 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா ஆக்டிவ் கேஸ் உள்ளன

தமிழகத்தில் நேற்று 5,914 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 976 பேர். ஒட்டுமொத்த அளவில் 3,02,815 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 6,037 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,44,675 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 53,099 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 114 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 5,041 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (11.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 384

மணலி - 103

மாதவரம் - 519

தண்டையார்பேட்டை - 664

ராயபுரம் - 821

திரு.வி.க நகர் - 737

அம்பத்தூர் - 1,619

அண்ணா நகர் - 1,214

தேனாம்பேட்டை - 713

கோடம்பாக்கம் - 1,433

வளசரவாக்கம் - 781

ஆலந்தூர் - 548

 அடையாறு - 839

பெருங்குடி - 485

சோழிங்கநல்லூர் - 454

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 14

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96,466 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 88 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,327 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 11,328 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,305 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,619 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,433 மற்றும் 1,214 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 103 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

.