This Article is From May 29, 2020

மேற்கு வங்கத்தில் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு! மம்தா மற்றும் சக அமைச்சர்கள் அதிர்ச்சி

அமைச்சரின் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

மேற்கு வங்கத்தில் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு! மம்தா மற்றும் சக அமைச்சர்கள் அதிர்ச்சி

கடந்த வாரம் திரிணாமூல்  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

Kolkata:

மேற்கு வங்கத்தில்  தீயணைப்பு துறை அமைச்சராக இருக்கும் சுஜித் போஸிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் முதல்வர் மம்தா பானர்ஜியையும், மற்ற அமைச்சர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இதேபோன்று அமைச்சரின் மனைவிக்கும் நேற்றிரவு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

அமைச்சரின் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

கடந்த வாரம் திரிணாமூல்  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

நேற்று மட்டும் மேற்கு வங்கத்தில் 344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,536  ஆக அதிகரித்துள்ளது. 223 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 72 பேர் நீண்ட நாட்களாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்கள் என அரசு தெரிவித்துள்ளது. 

ஆம்பன் புயல் பாதிப்பு, கொரோனா  தாக்கம் என இருபெரும் சோதனைகளை மேற்கு வங்க அரசு எதிர்கொண்டு வருகிறது.

.