This Article is From Jun 28, 2020

மிரட்டும் கொரோனா! நாடு முழுவதும் ஒரே நாளில் 19,906 பேர் பாதிப்பு!

இதுவைரை 82,27,802 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,31,095 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

மிரட்டும் கொரோனா! நாடு முழுவதும் ஒரே நாளில் 19,906 பேர் பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5,28,859 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,03,051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,09,713 பேர் குணமடைந்துள்ளனர். 16,095 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் 19,906 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 410 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 82,27,802 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,31,095 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

.