This Article is From Aug 27, 2020

தமிழகத்தில் 4 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,981 பேருக்கு தொற்று!!

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,981 நபர்களில் 1,286 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் 4 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,981 பேருக்கு தொற்று!!

ஹைலைட்ஸ்

  • தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.
  • இன்று மட்டும் 5,870 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 4,03,242 ஆக அதிகரித்து

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 76,345 மாதிரிகளில் 5,981 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 29வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,870 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. இன்று 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் குறைவான உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,948 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,981 நபர்களில் 1,286 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,30,564 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,666 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

.