This Article is From Aug 21, 2020

தமிழகத்தில் 3.67 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,995 பேருக்கு தொற்று!!

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,995 நபர்களில் 1,282 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்

தமிழகத்தில் 3.67 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,995 பேருக்கு தொற்று!!

ஹைலைட்ஸ்

  • இன்று கொரோனா எண்ணிக்கை 5,995
  • ஒட்டு மொத்த பாதிப்பு 3,67,430 ஆக அதிகரித்துள்ளது.
  • இன்று மட்டும் 5,764 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.67 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 74,344 மாதிரிகளில் 5,995 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 23வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,67,430 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,764 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,07,677 ஆக அதிகரித்துள்ளது. இன்று 101 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 19வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,340 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,995 நபர்களில் 1,282 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,22,757 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,557 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

.