This Article is From Aug 07, 2020

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று: ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92,128 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று: ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிலவரம்!

சென்னையில் 2,248 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2.12% பேர் இறந்துள்ளனர்
  • தற்போது அம்பத்தூர் மண்டலத்தில் அதிக ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

தமிழகத்தில் நேற்று 5,684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,091 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,79,144 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 6,272 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,21,087 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 53,486 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 110 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 4,571 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (07.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 402

மணலி - 77

மாதவரம் - 540

தண்டையார்பேட்டை - 605

ராயபுரம் - 797

திரு.வி.க நகர் - 917

அம்பத்தூர் - 1,469

அண்ணா நகர் - 1,260

தேனாம்பேட்டை - 834

கோடம்பாக்கம் - 1,326

வளசரவாக்கம் - 859

ஆலந்தூர் - 520

 அடையாறு - 917

பெருங்குடி - 494

சோழிங்கநல்லூர் - 470

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 233

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92,128 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 87 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,248 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 11,720 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,162 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,469 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,326 மற்றும் 1,260 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 77 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
 

.