This Article is From Sep 05, 2020

தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா! 67 பேர் பலி!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா!  67 பேர் பலி!!

தமிழகத்தில் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எமாத்த எண்ணிக்கை 4,57,697 உறுதியாகியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பின்படி, இதுவரையில் 50,42,197 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 79,840 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 5,870 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  இதில் ஆண்கள் 3,516 பேரும், பெண்கள் 2,354 பேரும் ஆவர்.  இதுவரையில் மொத்தம் 2,76,255 ஆண்களும், 1,81,413 பெண்களும், 29 திருநங்கைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 3,98,366 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று மட்டும் 5,859 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 61 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 40 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,685  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மூன்றாவது நாளாக ஆயிரத்திற்குக் கீழ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

.