This Article is From Mar 06, 2019

''அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை'' - தமிழிசை தகவல்

அதிமுக கூட்டணி இன்றைக்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

''அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை'' - தமிழிசை தகவல்

தேமுதிக மூத்த நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரை முருகனை சந்தித்துள்ளனர்.

அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். மோடி பங்கேற்கும் கூட்டத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் பேனர்கள் அகற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழிசை இவ்வாறு கூறியுள்ளார். 

தமிழகத்தில் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் தேமுதிகவை சேருமா சேராதா என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு, விஜயகாந்த் அதிமுக, பாஜக உடனான கூட்டணியை இறுதி செய்வார் என அதிமுக, பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். 

இதுகுறித்து பேட்டியளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இழுபறி என்று ஏதும் இல்லை என்று கூறினார். 
 

.