This Article is From Oct 25, 2018

பாரிக்கரின் உடல்நிலை குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது: கோவா அமைச்சர்

பிரார்த்தனை மற்றும் அற்புதங்கள் மீது ஒருவ நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வாஜித் ரானே கூறினார்

பாரிக்கரின் உடல்நிலை குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது: கோவா அமைச்சர்

மனோகர் பாரிக்கர் அக்.15ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து கோவாவிற்கு திரும்பினார்.

Panaji:

உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை பற்றி தற்போது எதுவும் கூற இயலாது என்று கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வாஜித் ரானே தெரிவித்தார்.

கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் கோவா முதலமைச்சர் கடந்த ஒரு மாத காலமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் அக்.15ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து கோவாவிற்கு திரும்பினார்.

நீண்ட நாட்களாக முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து விடுப்பில் இருக்கும் கோவா முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க மறுத்து வருவதனால், எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். பொது மக்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் மாற்று முதலமைச்சரை நியமிக்கும் படி வலியுறுத்தி வருகின்றனர்.

விஷ்வாஜித் ரானே கூறுகையில், பிரார்த்தனை மற்றும் அற்புதங்கள் மீது ஒருவ நம்பிக்கை கொள்ள வேண்டுமென்றார். அற்புதங்கள் நடக்குமென்ற நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும். சில சமயங்களில் மருத்துவ அறிவியலையும் மீறி, நோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள்.

ரானே கூறியபடி, மனோகர் பாரிக்கரின் உடல்நிலை டெல்லி எய்ம்ஸ் மற்றும் நியூயார்க் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவது தெரியவருகிறது.

.