ஷேக் வாசிம் பாஜக மாவட்டத் தலைவராக இருந்தார்
ஹைலைட்ஸ்
- BJP leader Sheikh Wasim's father and brother were also killed
- The attack took place while they were sitting outside a shop
- PM Modi extended his condolences to the BJP leader's family
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பந்திபூரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதி பாஜக தலைவரான ஷேக் வாசிம் அவருடைய சகோதரர் உமர் பஷீர், மற்றும் அவருடைய தந்தை ஆஷிர் அஹ்மத் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு ஒன்பது மணி அளவில் உள்ளூர் காவல் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையின் வாசலில் அமர்ந்திருந்த இவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
Over the telephone, PM @narendramodi enquired about the gruesome killing of Wasim Bari. He also extended condolences to the family of Wasim.
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) July 8, 2020
தகவலறிந்த பிரதமர் நள்ளிரவில் நிலைமை குறித்து விசாரித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் பாதுகாப்புப்படையின் தோல்வியினை காட்டுகின்றது. ஷேக் வாசிமுக்கு 8 வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தாக்குதல் நடைபெற்றபோது ஒருவரும் அவருடன் இல்லை. இந்நிலையில் கடமையை தவறியதற்காக பாதுகாப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
#Terrorists fired upon BJP worker Wasim Bari at #Bandipora. During indiscrimnate firing Wasim Bari, his father Bashir Ahmad and his brother Umer Bashir got injured and shifted to hospital but unfortunately all the three #succumbed to their injuries. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) July 8, 2020
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது என மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இந்த தாக்குதல் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. அவர்கள் சைலன்சர் பொருத்திய ரிவால்வரை பயன்படுத்தியுள்ளனர் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் இந்த கொலையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், "பாண்டிபோராவில் இளம் பாஜக தலைவர் வாசிம் பாரி மற்றும் அவரது சகோதரர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர்களுக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பு இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். என ராம் மாதவ் டிவிட் செய்துள்ளார்.
திரு வசீமின் மரணம் கட்சிக்கு பெரும் இழப்பு என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
“தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் தந்தை மற்றும் சகோதரரையும் நாம் இழந்துள்ளோம். இது கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு. எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். முழு கட்சியும் துயரமடைந்த குடும்பத்துடன் நிற்கிறது. அவர்களின் தியாகம் வீணாகாது.“ என நட்டா டிவிட் செய்துள்ளார்.
We lost Sheikh Waseem Bari,his father & brother in Bandipora, J&K today in a cowardly attack on them.This is a huge loss for the party. My deepest condolences are with the family.The entire Party stands with the bereaved family. I assure that their sacrifice will not go in vain.
— Jagat Prakash Nadda (@JPNadda) July 8, 2020
முன்னாள் ஜே & கே முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் இந்த தாக்குதலை கண்டித்து ட்வீட் செய்துள்ளார். குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
Sorry to hear about the murderous terror attack on the BJP functionaries & their father in Bandipore earlier this evening. I condemn the attack. My condolences to their families in this time of grief. Sadly the violent targeting of mainstream political workers continues unabated.
— Omar Abdullah (@OmarAbdullah) July 8, 2020
மக்கள் ஜனநாயகக் கட்சியும் வாசிம் கொல்லப்பட்டது குறித்து வருத்தத்தை தெரிவித்ததோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்த ஜே & கே நிர்வாகம் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டி ட்வீட் செய்திருந்தது.
With input from ANI, PTI