This Article is From Oct 29, 2018

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் மகளுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பணியிலிருந்த போது உயிரிழந்த மேஜர் அக்‌ஷய் கிரிஷின் மகள் நைனா

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் மகளுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நைனாவின் பிறந்த நாளுக்கு பலரும் டிவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மேஜர் அக்‌ஷய் கிரிஷின் மகள் நைனாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க பலர் ஒன்று திரண்டனர். ஞாயிறன்று டிவிட்டரில், ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாடும் நைனாவிற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு வந்த பதிவை தொடர்ந்து, பலரும் வாழ்த்த தொடங்கினர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர் மேஜர் அக்‌ஷய் கிரிஷ்.

அதிபயங்கர ஆயுதங்களால் தீவிரவாதிகள் நடத்திய ஐந்து மணிநேர தாக்குதலில், அக்‌ஷய் கிரிஷ் உட்பட, 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அப்போது நைனாவிற்கு வயது 3 ஆகும்.

இந்த டிவிட்டர் பதிவு கூட்டான்ஷ் வர்மா என்பவர் பதிவிடப்பட்டது. நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர்களின் படங்களை வரைபவர் வர்மா.

குழந்தை நைனாவிற்கு என்னுடன் இணைந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவியுங்கள், நமது நாட்டின் ஹீரோ அக்‌ஷய் கிரிஷ் நாக்ரூட்டா தாக்குதலில் உயிரிழந்தவர். அவரின் மகள் நைனா இன்று தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். என்று டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

வர்மாவின் டிவிட்டர் பதிவு 10,000 லைக்குகளையும் 4000 மறு டிவிட் பதிவுகளையும் பெற்றது. முகம் தெரியாத பலர் நைனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பேஸ்புக் பதிவில், மேஜர் அக்‌ஷய் கிரிஷின் மனைவி, தனது கணவரின் இழப்பை கையாழுவது குறித்து பேசினார்.

 

 
 

 
 

In 2017, in a moving Facebook post, Major Akshay Girish's wife Sangeeta spoke about dealing with the loss of her husband.

 

.