This Article is From Aug 22, 2018

நெஞ்சை பதறவைக்கும் பெங்களூரு விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை!

பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஒரு இரு சக்கர வாகன விபத்தின் வீடியோ, நெஞ்சை பதறவைக்கும் வகையில் இருக்கிறது

Bengaluru:

பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஒரு இரு சக்கர வாகன விபத்தின் வீடியோ, நெஞ்சை பதறவைக்கும் வகையில் இருக்கிறது. 

ஒரு இளம் தம்பதியும் அவர்களின் குழந்தையும் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் 3:30 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் பெங்களூருவுக்குச் சென்றுள்ளனர். அப்போது, இன்னொரு ஸ்கூட்டரை மூந்த முயன்றுள்ளார் அந்த ஆண். எதிர்பாராத விதமாக ஸ்கூட்டிரில் வண்டி மோத, வாகனத்திலிருந்த ஆண் மற்றும் பெண் தூக்கியெறியப்பட்டனர். ஆனால், வண்டி தொடர்ந்து எதிலும் மோதாமல் செல்கிறது. அதில் குழந்தையும் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து செல்கிறது. அரை கிலோ மீட்டர் தூரம் வரை பைக் எதிலும் மோதாமல் புள் தரையில் விழுந்ததால், குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. அதேபோல, குழந்தையின் பெற்றோர்களும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 

இந்த அனைத்து சம்பவத்தையும் கார்த்திக் கௌடா என்பவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்தார். அது தற்போது வைரலாகி வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இரு சக்கர வாகனத்தில் வந்த குடும்பத்தினரில் யாரும் ஹெல்மட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

.