This Article is From Nov 03, 2018

பீகாரில் மரத்தில் இறந்து கிடந்த ஆஸ்திரேலிய மனிதர்!

அந்த நபர் எதனால் இறந்தார் என்ற காரணத்தைப் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்

பீகாரில் மரத்தில் இறந்து கிடந்த ஆஸ்திரேலிய மனிதர்!

Locals found a man hanging from a tree and informed the police.

Gaya, Bihar:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 வயதான ஒருவர், பீகாரில் இருக்கும் போத் கயாவில் இருக்கும் காட்டின் ஒரு மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார். புத்த மதத்தவரின் புனித தளம் மற்றும் சுற்றுலாத் தளமான போத் கயாவில் இப்படி நிழந்தது அதிர்ச்சியளித்துள்ளத்து. "தற்கொலை செய்துகொண்டவரின் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதில், தன்னுடைய இறப்பை அவரின் சகோதரிக்கு தெரிவிக்கும்படி எழுதப்பட்டிருந்தது" என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்."சிட்னியை சொந்த ஊராகக் கொண்டவர் ஹீத் ஆலன்" என்றும் அவர்கள் கூறினார்கள்.

அந்தக் காட்டின் வழியாக சிலர் கடந்து செல்லும்போது, ஒருவர் மரத்தில் தூக்கியிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, போலீஸ் சம்பவத்துக்கு வந்தனர் போலீஸார். இறந்தவரின் அருகில், அவரின் பேக், தண்ணீர் பாட்டில் மற்றும் டைரி கண்டெடுத்தனர்.

"இறந்தவரின் உடலை கயாவில் இருக்கும் அனுராக் நாராயண் மகத் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது" என்று அதிகாரி தெரிவித்தார்.

.