This Article is From Aug 14, 2020

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தற்போது அவர் குர்கானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

டெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சை பெற்று வந்தார்

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 25 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கையில்  சமீபத்தில்  மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டிருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“இன்று எனது கொரோனா சோதனை அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது. நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், இந்த நேரத்தில் என்னையும் என் குடும்பத்தினரையும் வாழ்த்தி ஆசீர்வதித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பேன்.” என அமித்ஷா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் குர்கானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.