This Article is From Aug 26, 2018

ஈரோட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது!

ஈரோட்டைச் சேர்ந்த 21 வயது வாலிபர், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்

ஈரோட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது!
Erode:

ஈரோட்டைச் சேர்ந்த 21 வயது வாலிபர், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு, சிவகிரியைச் சேர்ந்த பள்ளி செல்லும் மாணவியான சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே, அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக சொல்லியுள்ளனர். இதையடுத்து அந்த சிறுமி, 21 வயது வாலிபர்தான் கர்ப்பத்துக்குக் காரணம் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், வாலிபர் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த வாலிபர் மீது போஸ்கோ சட்டத்துக்குக் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

.